முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் மற்றும் இனாமுல்லா போன்றோர் உலக தீவிரவாதி யூசுப் அல் கர்தாவியை சந்திக்க போனார்களாம்.

நாட்டுக்குள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பொது பல சேனா அமைப்பினர் ஈடுபடவில்லை என்று அவ்வமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொது பல சேனாவின் நடவடிக்கைகள் ஒழிவுமறைவின்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் வெளிப்படுத்தப்படுகின்றன என்றும் தேரர் தெரிவித்தார்.

நாட்டுக்குள் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால், வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்தார்.


இதேவேளை, நாட்டில் கெசினோ சூதாட்ட விடுதிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர் வீதியில் இறங்கி போராடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர்கள் ஐபேடில் இருந்த படம் ஒன்றை காட்டி முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் மற்றும் இனாமுல்லா போன்றோர்  உலக தீவிரவாதி யூசுப் அல் கர்தாவியை சந்திக்க போனார்கள் எனவும் உலமா சபைக்கு எதிராகவும் சில கருத்துக்களை முன்வைத்ததை வீடியோவில் காணலாம்.


கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:

Post a Comment