இலங்கை, பர்மா மற்றும் சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது


இலங்கை, பர்மா, சீனா ஆகிய நாடுகளில் அரசாங்க ஆதரவோடு முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கம் இனவாத வன்முறைகள் ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளது ரியாதை தலைமையகமாகக் கொண்டியங்கும் World Assembly of Muslim Youth அமைப்பு.

தமது அமைப்பினால் வெளிநாடுகளுக்கு நிதியுதவி செய்ய முடியாத அளவுக்கு தற்போதைய நிலையில் தடைகள் இருப்பதாகவும் புனித ரமழானுடைய காலத்தில் குறிப்பிட்ட நாடுகளில் முஸ்லிம் சமூகம் அச்சத்துடனும் இனவாதத் தாக்குதலுக்குள்ளாப்பட்டும் வாழ்வது ஆழ்ந்த கவலையளிக்கிறது எனவும் அராப் நியுஸ் செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்டுள்ளார் அமைப்பின் தலைவர் சாலி அல் வொஹய்பி.

இதன் போது இலங்கையின் தென்பகுதியில் வன்முறைகளால் உயிரிழப்பும் சேதங்களும் இடம்பெற்றிருக்கின்றமை குறித்தும் அவர் தெளிவுபடுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment